புலிகளுக்கும் அக்கா கணக்குக்கும் பணம் கொடுத்தவர்கள் யார்?
2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 200 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகக் கூறியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சுனாமி நிவாரண நிதியில் 300 மில்லியன் ரூபா களவாடி தனது சகோதரியின் கணக்கில் வைப்பிலிட்டவர் யார் என மக்கள் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்குச் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்கள் வாக்களிப்பதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் புலிகளுக்கு இந்தப் பணம் வழங்கப்பட்டது. இந்த பணத்தைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் நவீன ரக படகுகளை கொள்வனவு செய்தனர்.எனவும் தெரிவித்தார்