கே: கேரளத்தவரிடையே உள்ள தோழமை உணர்ச்சி தமிழர்களுக்கு இல்லை. தமிழர்கள் அவ்வுணர்வைப் பெற தாங்கள் கூறும் வழி என்ன?
ப: எந்தத் தலைமுறையிலும் தமிழனுக்கு அந்த உணர்ச்சி வராது. இது ஒரு சொரணை கெட்ட ஜாதி, கீழே விழுந்தவனை ஏறி மிதிக்குமே தவிர, கை கொடுக்க மனம் வராது. மேல்நாட்டு ஆசிரியர் ஒருவர் இந்திய இனங்களை வருணித்தார். பஞ்சாபியரை, ‘ஒட்டகம் மாதிரி’ என்றார், அப்படி உழைப்பார்களாம். ராஜஸ்தானியர்களை ‘சிங்கம்’ மாதிரி’ என்றார். வங்காளிகளை ‘பந்தயக் குதிரை’ என்றார். கேரளத்தவரை ‘கலைமான்கள்’ என்றார், தமிழனை மட்டும் ‘நாய் மாதிரி’ என்றார். காரணம் சொல்லும்போது ‘தமிழன் வேலை பார்க்கும் இட்த்துக்கு விசுவாசமாக இருப்பானாம், சக தமிழனைக் கண்டால் குரைப்பானாம். நாய் அப்படித்தானே?
கவிஞர் கண்ணதாசன் அளித்த பதிலொன்றில்
November 10, 2010 by teavadai
Leave a comment